புதுமை விரும்பி ஆசிரியர்

இரா.கோபிநாதன் M.A.,B.Ed.,DTEd.,

செத்த பாம்பு 🐍

 🌼ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.


அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.

.

🌼மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது.


பாம்பும் குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது .


குரங்குக்குக் கொஞ்சம் பயம்

வந்து விட்டது.


கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.


🌼ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.


🌼”ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு .

இது கொத்துனா உடனே மரணந்தான்.


குரங்கு பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது


” என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .

*

🌼தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை ,


எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு ,


மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன.


“ஐயோ. புத்தி கெட்டுப் போய்

நானே வலிய வந்து இந்த

மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே”.


குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.

நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது.


கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.

*

🌼அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார்.


குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.

*

🌼சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.


அவர் நெருங்கி வந்து சொன்னார் ,” எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு” என்றார்.


🌼குரங்கோ ,”ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் ” என்றது.


அவர் மீண்டும் சொன்னார் ,” பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு “.அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.


அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா .

*

🌼குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது .”இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே ” என்றபடி ஞானி கடந்து போனார்.


*

🌼நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.


🌼கவலைகளை விட்டொழியுங்கள்.


🌼மகிழ்ச்சியாய் இருங்கள், , ,


🌼ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்


🌼பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்


🌼கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்


🌼துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்


🌼பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்


🌼எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்


🌼அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும்.


🌼ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். உடலின், மனதின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள்.


🌼பசிக்கும் போது உணவருந்துங்கள்.


பசியை நீங்கள் புறக்கணித்தால் பசி உங்களைப் புறக்கணிக்கும்.


எப்போதும் உடலின் அழைப்பை புறக்கணிக்காதீர்கள்..!!!

------------

படித்ததில்..சுட்டது..!

பதிவிடல் அனைவர் நன்மைக்காக..

..

-----------

No comments:

Powered by Blogger.