Wednesday, March 18, 2020

ஆசிரியர்களைப் புரிந்து கொள்வோம் (Must Read All) !
🍑 ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் இருக்கிறார்கள்.
🌻அவர்களுக்கு ஆசிரியர் பாடம் நடத்துவதை ஒரு பார்வையாளராக கவனித்தால், அதன் மதிப்பு உங்களுக்குப் புரியாது.
🌻 ‘‘அவர்களுக்குப் பாடம் எடுங்கள்’’ என்று உங்களை வகுப்புக்குள் அனுப்பி வைத்தால், நீங்கள் போய் பாடமெடுத்தால் மட்டுமே, ஆசிரியரின் கடின உழைப்பு புரியும்.
🌻40 மாணவர்களையும் முதலில் அமைதியாக இருக்க வைக்க வேண்டும். அதற்கு கொஞ்சம் அதட்ட வேண்டும், கொஞ்சம் அன்பாகப் பேச வேண்டும், கொஞ்சம் கெஞ்ச வேண்டும்.
🌻‘‘பிரின்சிபல் (தலைமை ஆசிரியர்) கிட்ட சொல்லிருவேன்’’ என்று மிரட்ட வேண்டும். இதில் ஏதாவது ஒன்றை அதிகமாகச் செய்தாலும் பிரச்சனை வந்து விடும்.
🌻இப்போதெல்லாம் பலரும் ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொள்வதால், குழந்தைகள்மீது அதிக பாசம் வைக்கிறார்கள்.
🌻பள்ளியிலிருந்து திரும்பும் குழந்தையின் முகம் லேசாக வாடினாலே பள்ளிக்குத் தேடி வந்து விடுகிறார்கள்.
🌻அதனால் ஆசிரியர்களால் அதிகம் அதட்டவும் முடியாது. அப்படி அதட்டாமல் அன்பாகச் சொன்னால் மாணவர்களை உடனே கட்டுப்படுத்தவும் முடியாது.
🌻 வகுப்பின் நேரமே 40 நிமிடங்கள்தான். அங்கே அன்பாகப் பேசி கட்டுப்படுத்த 15 நிமிடங்கள் எடுக்க முடியாது. பாடம் எடுத்து, அது ஒவ்வொரு மாணவருக்கும் புரிந்திருக்கிறதா?என்று கவனிக்க வேண்டும்.
🌻ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் என்றால், அதை மாணவர்கள் ஒழுங்காக நோட்டில் எழுதுகிறார்களா என்று சோதிக்க வேண்டும்.
🌻இப்படி 40 நிமிடங்களில் ஓர் ஆசிரியர் பெற்றோரை, மாணவரை, தலைமையாசிரியரை, கல்வித்துறை அதிகாரிகளை என பலரையும் திருப்தி செய்ய வேண்டும்.
🌻இவ்வளவையும் செய்து பாடத் திட்டத்தையும் சரியான காலத்தில் முடிக்க வேண்டும்.
🌻ஆசிரியர் தொழில் என்பது முழுக்க முழுக்க மனித மனங்களோடு உறவாடுவதுதான்.
🌻ஒரு பொறியாளர் மாதிரி வேலையை செய்துவிட்டுப் போக முடியாது. ஆசிரியர்களின் வேலையே பேசுவதுதான்.
🌻ஆசிரியர்கள் வகுப்பில் பாடத்தை ஒருமுறைதான் சொல்லிக் கொடுக்க முடியும். அதைத் திரும்பத் திரும்ப வீட்டில் படிக்க வைப்பது பெற்றோர்கள் கடமையே.
🌻இப்படி வகுப்பையும் கட்டுப்படுத்தி, ஒழுக்கத்தையும் போதித்து, கல்வியையும் போதிக்கும் ஆசிரியர்களை சரியாக ஒவ்வொரு  பெற்றோரும் புரிந்துகொள்ளும் போதுதான் அங்கே மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.
 ஆசிரியர்களைப் புரிந்து கொள்வோம்.

குழந்தை பாதுகாப்பு

Parents Must Read:

👉 பெங்களூரில் 'little flower' என்கிற பள்ளியில் படிக்கும் 8 வயது சிறுமியிடம் முன்பின் தெரியாத ஒரு நபர், உன்னை அழைத்துவரசொல்லி உன்னுடைய அம்மா என்னை அனுப்பிவைத்துள்ளார். வா போகலாம் என்று சொல்லி இருக்கிறார்.

உடனே அந்த சிறுமி , "password" சொல்லுங்கள் உங்களுடன் வருகிறேன் என்று சொல்லி இருக்கிறாள்....

(அதாவது முன்பின் தெரியாத யாராவது உன்னை அழைத்தால் இந்த password கேட்டு தெரிந்துகொண்டு செல் என்று முன்னரே அவளுடைய தாயும் , இந்த சிறுமியும் ஒரு password பகிர்ந்துகொண்டுள்ளார்கள்) ...,

சிறுமி password கேட்கவும் அந்த கடத்தல் ஆசாமி எஸ்கேப் ஆகிவிட்டான்.

அருமையான யோசனை அல்லவா இது.... பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இந்த முறையை உடனே அமல்படுத்துங்கள் பெற்றோர்களே....!

💥Pls share it

மதிப்பெண்கள் மட்டுமே கல்வியா ?

கோயம்புத்தூர் பள்ளிக்கூடம் ஒன்றினால் பெற்றோருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் ஒன்று,,,

*அன்பார்ந்த பெற்றோர்களே!*

*உங்களுடைய பிள்ளைகளுக்கான பரீட்சை விரைவில் ஆரம்பமாகவுள்ளது.*

*பிள்ளைகள் சிறப்பாக பரீட்சையை எழுத வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருப்பீர்கள் என நம்புகின்றோம்.*

*எனினும் இந்த விஷயங்களையும் கவனத்திற் கொள்ளுமாறு பணிவாய்க் கேட்டுக் கொள்கின்றோம்.*

*தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களில்*
*ஒரு கலைஞன் இருப்பான்*

*அவனுக்கு கணிதம் தேவைப்படாது.* *அங்கே ஒரு தொழிலதிபர் இருப்பான்* *அவனுக்கு வரலாறு / இலக்கியம் முக்கியமில்லை.*

*ஒரு இசைஞானி இருப்பான்* *அவனுக்கு இரசாயனவியல் அவசியமிறாது.*

*ஒரு விளையாட்டு வீரனிருப்பான்* *அவனது உடல் நலனே முக்கியமன்றி* *பெளதீகவியல் புள்ளி முக்கியமில்லை.*

*பரீட்சையில் அதிக மதிப்பெண் எடுத்தால் சிறந்த பிள்ளை..*

*எடுக்காவிட்டால் எடுக்காவிட்டால் தரம் குறைந்த மாணவன என்று*

*தயவு செய்து அவர்களது தன்நம்பிக்கையை ஒருபோதும் பறித்து விடாதீர்கள்.*

*அவர்களுக்கு சொல்லுங்கள் இது வெறும் ஒரு பரீட்சை மட்டுமே.*

*நீ வாழ்கையில் வெற்றி கொள்ள இதை விட பெரிய சவால்கள் நிறைய உள்ளன.*

*உன் மீதுள்ள என் அன்பு நீ பரீட்சையில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்து தீர்மானிப்பதில்லை.*

*என்றும் நீ என் பிள்ளை என் உயிர். இப்படி சொல்லி பாருங்கள். பரீட்சையில் வெல்லாத உங்கள் பிள்ளை ஒரு நாள் உலகை வெல்வான்.*

*வெறுமனே ஒரு பரீட்சை, அதன் மதிப்பெண் உங்கள் பிள்ளையின் கனவை, திறமைகளை அழித்து விடக்கூடாது.*

*மருத்துவர்களும், பொறியாளர்களும் மட்டுமே உலகில் சிறந்தவர்கள், மகிழ்ச்சியாய் இருப்பவர்கள் என தயவு செய்து நினைக்காதீர்கள்.*

*உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் எமது நல்வாழ்த்துக்கள்.*
படித்ததில் ரொம்ப ரொம்ப பிடித்தது

தவளை ஆராய்ச்சி

#தவளையை கொண்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த ஒருவன் "தாவு"என்று சொன்னால் தாவும்படி பழக்கியிருந்தான்,
ஒரு காலை வெட்டி விட்டு "தாவு"என்றான்.தாவியது.
இரண்டாம் காலை வெட்டி விட்டு"தாவு"என்றான்...வலியோடு தாவியது.

மூன்றாம் காலை எடுத்தும் மிகுந்த வலியோடு ஒற்றைக் காலால் தாவியது.

நான்காம் காலையும் வெட்டி விட்டு தாவு என்றான் நகர முடியாமல் பரிதாபமாய் படுத்தது.
மறுபடி தாவச் சொல்லி கத்திக் கொண்டேயிருந்தான்.
அதனிடமிருந்து அசைவேயில்லை ஆராய்ச்சி முடிவை இப்படி எழுதினான்-

#நான்கு #கால்களையும் #எடுத்து #விட்டால் #தவளைக்கு #காது #கேட்காது...

இப்படி தான் இன்றைய  #கல்விமுறையும் பலரின் #புரிதல்களும் உள்ளது.

வாயை மூடிக்கிட்டு ஒரு மொபைல் போன் குறைந்தது 10 ஆயிரம் விலைகொடுத்து வாங்கும் சாமானியன் ஒரு பசு மாட்டுக்கு 10 ஆயிரம் விலைகொடுத்து வாங்க வலிக்குது. 5 ஆயிரம் கொடுத்து ஒரு ஆட்டுக் குட்டிய வாங்க வலிக்குது.

தினமும் 20, 50, 100, 200 ரூபாய் ரீச்சார்ச், இன்டர்நெட்டுன்னு செலவு செய்யும் சாமானியன் தக்காளி கிலோ 5 ரூபாய்க்கு கொடுங்கன்னு சொல்றான்.

நாட்டுப் பற்று, சொந்தம் பந்தம் பற்றி வாய் கிழிய பேசுவிங்க, உங்களுக்காக உங்க ஊருக்காரன் வச்சிருக்கும் கடையில் போய் ஒரு பெண்ட்ரைவ் கூட வாங்க மாட்டிங்க, உங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் அமேசான், பிளிப்கார்ட்… அதில வாங்குறத கௌரவமா வேற நினைக்கிற…

அரிசி போட்டவுடன் வேகணும்!
சோறு பளபளன்னு வெள்ளையா இருக்கணும் !
பொடிசா இருக்கணும் !
ஆனா நோய் வரக்கூடாது.

பழுப்பு நிறத்துல இருக்கிற அரிசிய வெள்ளையா கேட்டா அவன் எதையாவது போட்டு கலரா மாத்ததான செய்வான்?
தப்பு யார் மேல?

கீரை பச்சையா இருக்கணும், இலையில சின்ன ஓட்டைகூட இருக்ககூடாதுன்னு நீ கடைகாரண்ட்ட கேட்ப..,
அவன் விளைவிக்கிறன்ட்ட சொல்றான்…
விளைய வைக்கிறவன் பூச்சி மருந்த அடிக்கிறான்…
நீயும் வாங்கி சாப்டுற,

அப்புறம்  அது வலிக்குது இது வலிக்குதுன்னு டாக்டர்ட்ட போற,
அங்கே என்ன நடக்குது?

இதுக்கு ஒழுங்கா நாலு கீரை பூச்சி கடிச்சிருந்தாலும் ஒழுங்கா கழுவி தின்னுருக்கலாம்ல?

எல்லோரும் ஆடு மாடு மேச்சவன் வாரிசுதான். என்ன கூட குறைய ஒரு சில தலைமுறைகள் இருந்திருக்கும். இப்போ பேன்ட் சட்டை, பேமிலி டாக்டர், KFC Chicken, Pizza, Burger னு வாழ்ந்துட்டா சந்தோசம் கிடைச்சிடுமா?

நல்லது எது கேட்டது எதுன்னு புரியாம வாழ்றதவிட இன்னும் ஆடு மாட வச்சு சாணிய அள்ளி உரமாக்கி எங்கே ஒரு மூலைல உனக்காக உழைச்சிட்டு இருக்கானே அவன் எவ்வளவு மேலானவன் என்பதை என்று உணர்வீரோ!

நல்லதை சாப்பிட நினை.
சாப்பிட கொடுத்தவனை நினை.

வாழ்க விவசாயி! வாழ்க விவசாயம்!

தன்னம்பிக்கை பதிவு

தன்னம்பிக்கை பதிவு.

*உழைப்பு என்ற ஆயுதம்!*

*┈┉┅━❀❀━┅┉┈​​​​​​​​​​*




*என்னால் முடியாது என்று அடிக்கடி சொல்லாதீர்கள்!*

*அது ஆழ் மனசில் பதிந்து, அது தன் வேலையைச் செய்யும்!*

*நீங்கள் எந்த வேலையில் ஈடு பட்டாலும், நம்மால் முடியாது என்று நினைத்தால் அது உங்களைப் பலவீனப் படுத்திக் கொண்டே இருக்கும்!*

*அதற்குப் பதிலாக என்னால் முடியும் என்று அடிக்கடி சொல்லிப் பாருங்கள்!*

*அது அடி மனசில் பதிந்து, நீங்கள் செயல் படும் பொழுது ஊக்கப் படுத்திக் கொண்டே இருக்கும்!*

*விடியும் ஒவ்வொரு நாட்களையும் உற்சாகத்தோடு வரவேற்கப் பழகிக் கொள்ளுங்கள்!*

*அப்பொழுது தான் அன்றாடம் நீங்கள் செயல் படுவதற்கு தேவையான சுறு சுறுப்பு கிடைக்கும்!*

*வாழ்க்கையில் எதிர் படும் தோல்விகளைக் கண்டு அஞ்சாமல் தொடர் முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் தான் வாழ்க்கையில் வெற்றியடைகிறார்கள்!*

*பணத்தைப்  பார்த்துப் பார்த்து செலவு செய்யத் தெரிந்த பலர், நேரத்தை வீணாக கண்டபடி செலவு செய்கிறார்கள்!*

*அதனால் தான் அவர்கள் முன்னேற்றம் தடை படுகிறது!*

*நமக்கு வேண்டிய சக்தி நமக்குள்ளே தான் இருக்கிறது.*

*நாம் அதை பயன் படுத்தும் அளவைப் பொறுத்தே நம் முன்னேற்றம் இருக்கிறது!*

*நம்மால் முடியும் என்று நம்பினால் நிச்சயம் அந்தக் காரியம் நினைத்தபடி நிறைவேறி விடும்!*

*நம் மனசுக்குள் தளராத நம்பிக்கை என்ற ஒரு ஜெனரேட்டர் இருக்கிறது!*

*அதை ‘ஆன்’ பண்ணினால் வேண்டிய மட்டும் நமக்கு சக்தியை உருவாக்கிக் கொடுக்கும்!*

*வாழ்க்கையில் வெற்றி பெற விரும்புபவர்கள் தங்கள் ஆழ் மனசில்  நல்ல சிந்தனைகளை விதைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.*

*எப்பொழுதும் நல்ல சிந்தனைகள் நல்ல பலன்களையும், தீய சிந்தனைகள் தீய பலன்களையும் தரும் என்பதை மறந்து விடாதீர்கள்!*

*நம் சிந்தனைகள் எப்பொழுதும் நேர்மையான பாதையில் இருக்கும் பட்சத்தில், யார் என்ன நினைப்பார்கள் என்று ஒரு நிமிடம் கூட கவலைப் பட வேண்டிய அவசியம் இல்லை!*

*வெற்றி பெற்றவர்களைக் கவனித்தால் நமக்கு இரண்டு விஷயங்கள் தெளிவாகப் புரியும்!*

*ஒன்று அவர்கள் எப்பொழுதும் நேர்மையான வழியிலேயே சென்றிருப்பார்கள்!*

*இரண்டு அவர்கள் எந்த சூழ் நிலையிலும் தங்கள் தன்னம்பிக்கையை இழந்திருக்க மாட்டார்கள்!*

*நமது இலட்சியம் மட்டும் மிக உயர்வாக இருந்தால் போதாது.*

*அதை அடையும் வழியும் உயர்வாகவே இருக்க வேண்டும்!*

*ஒரு காரியத்தைத் தொடங்கும் பொழுது இருக்கும் வேகம் அதை முடிக்கும் வரை இருக்க வேண்டும்! ஓவ்வொரு அனுபவமும் ஒரு பாடமாக இருக்கும்!*

*எதிர் படும் ஓவ்வொரு தடையும் ஒரு புதிய வழியை யோசிக்க வைக்கும்!*

*நம் கடமைகளை ஒழுங்காக நாம் செய்யும் பொழுது, தீய வழிகளில் நாம் செல்வதை அதே தடுத்து விடும்!*

*நேரத்தை வீணாக்குவதும், நம்பிக்கையை இழப்பதும் கிட்டத்தட்ட தற்கொலை முயற்சி தான்!*

*நேர்மையும், நாணயமும் இல்லாதவர்கள் தேடிக் கொள்ளும்  புகழும், வெற்றியும் நிரந்தரமானது அல்ல!*


*விரைவில் படு குழியில் தள்ளி விடும்!*


*நல்ல புத்தகங்கள் படிப்பது நல்ல அறிவாளிகளுடன் பேசுவதற்கு சமம்!*

*யாரிடம் பேசினாலும் அளவோடு பேசுங்கள்!*

*இனிமையாகப் பேசுங்கள்!*

*நல்ல ஒழுக்கத்தை விட மேலான ஒன்றை நீங்கள் உங்கள் குழந்தைக்கு கற்றுத் தந்து விட முடியாது!*

*எப்படி ஒருவன் மொட்டை அடிப்பதால் மட்டும் துறவியாகி விட முடியாதோ, அது போல் வெறும் ஆசைப் பட்டால் மட்டும் வாழ்க்கையில் முன்னேறி விட முடியாது!*

*நம்பிக்கையோடு உழைப்பு என்ற ஆயுதத்தை கைகளில் எடுங்கள்!*

*அது வறுமை, சோம்பேறித்தனம், தீய குணம் அனைத்தையும் பொசுக்கி, உங்களை வெற்றிக்கு அழைத்துச் சென்று விடும்!*




*┈┉┅━❀❀━┅┉┈​​​​​​​​​​*